Tuesday, March 7, 2017

அவளும் பயிரும்


நட்ட விரல் நழுவிவிட
வேரை மண்ணு பிடிச்சிக்கிடும்
பொட்டச்சி நட்ட நாத்து
பொல பொலன்னு வளந்து நிக்கும்

கண்ணில் பட வேணுமின்னு
களைகளெல்லாம் தல தூக்கும்
கைப்பற்றி அவ இழுக்க
கெழங்கோட கழன்று வரும்

வரப்பு மேல அவ நடந்தா
கால்களுக்கு விசிறி விடும்
அறுத்த கதிரில் கால் பட்டா
கொலுசுபோல சிலுசிலுக்கும்

நெல்லு குத்தி அவ புடைச்சா
நித்திலமா பல்லிளிக்கும்
பானையிலே வடிச்ச சோறு
பூவப்போல வாசம் வீசும்

------------

அனைவருக்கும் முன்கூட்டிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// வரப்பு மேல அவ நடந்தா
கால்களுக்கு விசிறி விடும் //

ஆகா....!

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன்