Friday, February 19, 2016

தோற்றுப்போகிறேன்

"ஏய்" என்றவனிடம்
"ஏய்" என்று வீரம் காட்டிவிடுகிறேன்
சிறு குழந்தையின் முன்
மண்டியிட்டு மழலையாகிறேன்-
லுல்லு லுல்லு பேசி.
இறைவனிடம் கூட
படைப்பதிலும் காப்பதிலும்
நானும் நீயும் ஒன்றென்று
சொல்லிவிடமுடிகிறது.
ஆனால்
எதைச்செய்தும்
உனது மென்காதலின்
முன்நிற்க முடியாமல்
தோற்றுப்போகிறேன்
செஞ்சாந்தாய்க் குழைந்தும்
சிறு கீற்று நிலவிடம்
தோற்றொளியும்
அந்திச் சூரியனைப்போல்
‪#‎காதல்_மாதம்‬

No comments: