Friday, June 19, 2015

பட்டி, தொட்டி மற்றும் சிட்டி

வட்டியோடு சேருதையா வட்டி-
இஷ்டத்துக்கும் போடுதையா குட்டி.

உரத்தோடு மருந்தெல்லாம் கொட்டி
பயிர் செய்த கடனுக்கு வட்டி
வெள்ளாமையைத் தின்னுது வயிறுமுட்டி
விவசாயி நிக்குறான் கையைக் கட்டி.

புதுவீட்டில் குடி வரும்
கடன் வட்டி-
வீட்டைக் காலி பண்ணுமா
இந்த ஜோடி?

பிள்ளைகளைக் கட்டிக்கொடுத்தால்
தாத்தா பாட்டி-
கடனும் வட்டியும்தான்
பேரன் பேத்தி

செத்தவனை வைக்கவேணும்
ஐஸ் பெட்டி -
அதுக்கும் கட்டுறான்
கந்து வட்டி

ஐயகோ, இந்த தேசத்தில்
ஆறு முதல்;
அறுபது வட்டி.

கட்டிக் கட்டி வட்டி ஆறாத கட்டி.

“ஆண்டவரே...”, “இறைவா...”, “சாமி....”
ஆதரிக்க வேணும் இந்த பூமி.
முடிஞ்சா செஞ்சி நீயும் காமி
வட்டியில் மூழ்காத
பட்டி, தொட்டி மற்றும் சிட்டி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... மூழ்கடித்து விடும்...