Sunday, April 12, 2015

கோட்டுக்குப் பதில் பூட்டு

வில்லுக்குள் ஜனகனும்
கண்ணுக்குள் ராமனும்
கோட்டுக்குள் இலக்குவணனும்
வனத்துக்குள் இராவணனும்
மனதுக்குள் அனுமனும்
தணலுக்குள் குடிமகனும்
தனக்குள் பூமகளும்
சிறைவைத்தனர் சீதையை

மாரீசன் செய்தது சதி
ராமன் சென்றது விதி
சீதை இழந்தது கதி
இலக்குவணன் இழந்தது மதி
இருந்தால் போட்டிருப்பான்
கோட்டுக்குப் பதில் பூட்டு

1 comment:

ஸ்ரீராம். said...

//கோட்டுக்குப் பதில் பூட்டு//

அதற்கும் வைத்திருப்பான்
ராவணன் வேட்டு!