Saturday, February 14, 2015

காதலின் வெற்றி

மலைப்பாதையோரத்தில்
பாறைகளில் எழுதியிருக்கலாம்
நம் காதலை-

மரங்களை ரணமாக்கி
வடுக்களாய் விட்டிருக்கலாம்
நம் பெயர்களை-

கடற்கரையோரத்திலன்றோ
எழுதிவைத்தோம் நம்காதலை-
சுடுமணல் தாக்காமல்
உன் பஞ்சுப் பாதங்களை
நொடிக்கொருதரம் குளிர்வித்த
அதே அலைகள் அழித்தொழிக்க....?

தொலைந்துபோன தடத்தில்
நான் இன்று சிந்தும்
கண்ணீர்த்துளிகள் மட்டும்
காதலில் வென்று கலக்கின்றன
உப்புக் கடலில்.

No comments: