Thursday, February 12, 2015

காதல் செய்யும் பெண்ணே

காதல் செய்யும் பெண்ணே
கவனமாகப் பண்ணு.
மோகத்தில் செய்யும் முடிவு நம்மை
ஆபத்தில் கொண்டு சேர்க்கும்.
எம்மதமும் சம்மதம் என்றவன்
என்மதத்திற்கு மாறிடு என்றால்
அவன்மேல் எச்சில் உமிழ்ந்துவிடு.
பெற்றவர்களை விட்டு வா
பிள்ளை பெற்றெடுப்போம் என்பானை
பைத்தியம் என்று விலகு.
புருஷனை விட்டு வா என்பானை
போலீசில் பிடித்துக் கொடு.
பிள்ளையை விட்டு வா என்பவனை
போட்டுத் தள்ளிவிடு.
கௌரவக் கொலைக்கு வாய்ப்பிருந்தால்
காதலை கருணைக் கொலை புரிந்துவிடு.
ஆணுக்குக் கழிவென்றும்
பெண்ணுக்குக் கருவென்றும் விதித்த
இயற்கையின் சதி உணர்.
காதல் செய்யும் பெண்ணே
கவனமாகப் பண்ணு.

No comments: