Sunday, February 1, 2015

எரியும் பகலவன்

Remembering Muthukumar
உன் மரண சாசனத்தை
நகலெடுத்துக் கொடு என்றாயே
முத்துகுமரா-
எரியும் பகலவனை
நகலெடுக்க முடியுமா?
தமிழ் பேசும் உயிர்கள் பல வாடுதென்று
தமிழ் பேசும் உயிர்களில் ஒன்று
குறைந்துபோனதே...
ஆயினும்...
நீ விட்டுச் சென்ற உயிர்
தமிழ் பேசிக் கிடக்குதடா.
உன்னை வணங்கி
நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம்.
வீரர்கள் மரிக்கலாம். தோற்பதில்லை.

No comments: