Friday, December 5, 2014

காத்திருந்த கிளி


மாமனுக்குக் காத்திருக்கும் மான்விழியாள் பாடுவது:


நீள விழி பூத்திருக்கேன்
நித்திரையைத் தோத்திருக்கேன்
சேர்த்து வச்சிப் பார்த்திருக்கேன்
சித்திரைக்குக் காத்திருக்கேன்
மாமன் நெனப்பு பாவி மனசில்
குந்திவிட்டதே
காமனும் விட்ட அம்பு இவளக்
குத்திவிட்டதே ( நீள விழி பூத்திருக்கேன்)

மாமா என் மாமா
மீசை வெச்ச மாமா
ஆசையைத்தான் காட்டிவிட்டு
மோசம் செய்யலாமா?
அல்லும் பகல் உன்னை நெனச்சி
ஏங்க வைக்கலாமா?
என்னை நீயும் தவிக்கவிட்டு
இப்டி பண்ணலாமா? (நீள விழி பூத்திருக்கேன்)

வீராதி வீரா
ஊருக்குள்ள தேரா?
வீட்டுக்குள்ள அத்தையைச் சுத்தும்
ஆட்டுக்குட்டி நீரா?
பின்னியும்தான் பூமுடிச்சேன்
என்னைச் சுத்தி வாய்யா
பின்னாளில் சாய்ஞ்சுகொள்ள
என்னைத் தாரேன் வாய்யா (நீள விழி பூத்திருக்கேன்)

No comments: