Saturday, August 17, 2013

கொசுவும் நானும்

போர்வையின் விலகலைப்

பறை சாற்றியது

வெளியேறிய பாதக் கொலுசொலி.…

எஞ்சியிருந்த இருட் போர்வையையும்

விலக்கி, வெள்ளிக் கொடி படர்ந்த

கணுக்கால் வெளியை

மேய்ந்து கொண்டிருந்தது

திரைச்சீலை ஒழுகிய ஒளி...

மின்சாரம் குடித்து

போதையில் சுழன்று கொண்டிருந்தது

உன் குழற்கற்றையை

அசைத்த குதூகலத்தில்

மின்விசிறி...

உன் இளஞ்சூட்டு ரத்தத்திற்கு

என்னைப் போலவே

ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது

தொடுவதா வேண்டாமா

என்ற சிந்தனையில் கொசு...

2 comments:

கௌதமன் said...

கடித்தேன் - சுவைத்தேன். சாரி படித்தேன், சுவைத்தேன்!

மோ.சி. பாலன் said...


நன்றி கௌதமன்