Thursday, April 18, 2013

மகளுடன் உரையாடல்

மகள்: அப்பா பட்டாம்பூச்சியை மீனா வண்ணத்துப்பூச்சின்னு சொல்லுறா..

நான்: சொல்லலாமே..வண்ணம்னா கலர் தெரியுமில்ல?

மகள்: தெரியும்

நான்: பட்டாம்பூச்சி கலர் கலரா இருக்கறதனால வண்ணத்துப்பூச்சின்னும் சொல்லலாம்

மகள்: அப்ப வானவில்ல வண்ணவில்லுன்னு சொல்லலாமா?

நான்: சொல்லலாம். ஆனா அது வானத்துல இருக்கறதனால வானவில்லுனு சொல்லுறோம்

மகள்: அப்ப வண்ண வானவில்லுனு சொல்லலாமில்ல..

நான்: சொல்லலாமே... !

No comments: