Tuesday, February 7, 2012

மானிட இலக்கணம்

சூடான சோறும் ஆறிய சொற்களும் படைப்பவரே அன்னை; மனைவி
கொஞ்சம் பணமும் கொஞ்சும் மனமும் கொண்டவரே தகப்பன்; கணவன்
இருப்பதைச் சொல்லி இல்லாததைக் கொடுப்பவரே குரு
தன்னை உணரத் தன்னை உணர்த்துவதே தெய்வம்
அறியும் விழிகளும் ஆற்றும் விரல்களும் வளர்ப்பவரே வளரும் பிள்ளைகள்
அழைக்காமல் வந்து பழிக்காமல் செல்பவரே உறவும் நட்பும்
மனிதனாய் வாழ்ந்து மிருகத்தையும் நேசிப்பவரே மனிதர்



2 comments:

வேர்கள் said...

//மனிதனாய் வாழ்ந்து மிருகத்தையும் நேசிப்பவரே மனிதர் //
உண்மை
அருமை
அழகு :)

ஸ்ரீராம். said...

கடைசி இரண்டு வரிகளும் டாப்.