Thursday, January 12, 2012

"New York நகரம்" - remix

"New York நகரம்" பாடல் ஏ ஆர் ரகுமான் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை remix செய்யும் முயற்சி இங்கே. திரு. வாலி அவர்கள் மன்னிப்பாராக!
_______________________________________________________

ரோஜாப் பூவும் பனியில் நனைந்து இதழ்கள் திறந்ததே...
அழைப்பிதழும் விடுத்ததே...
முட்கள் மீதிலும்... பனியின் முத்தம் படிந்ததே
நானும் கைநீட்டித் தழுவிடும் போது தொலைவில் மறைந்ததே...
நொடியில் கனவும் கலைந்ததே.. (ரோஜாப் பூவும்)

பார்த்திருந்த பாவை முகமும்
விழித்திரையில் படர்ந்த படம் தானோ
நீர்த்தெரித்து விழியும் மூட அணை
உடைக்கும் நினைவும் ஏனோ...ஓ ..ஓ ..ஓ ..?
வாழ்கின்ற காலமெல்லாம் உன்னை
என்னுள் வைத்து முழுவதும் நிறைத்த காதல் தேனோ?
நான்சென்ற தூரமெல்லாம் உந்தன் எண்ணங்களும்
எந்தன் நெஞ்சில் சுமைகள் ஆனதேனோ...ஓ ..ஓ ..ஓ ..? (ரோஜாப் பூவும்)

நான் கடக்கும் பால நிழலில் நீர் நின்று…. போவதே இல்லை
நீர் சுழித்து நடந்த பிறகும் நதி நின்று-போவதில்லை
நாள் இங்கே நீரைப்போலே நித்தம் என்னை விட்டுக்
கண்ணை விட்டுக் கடந்து தூரம் போகும்
வாழ்விங்கே நதியைப் போலே உந்தன் நினைவினில்
தளும்பிடத் தொடர்ந்து தேடி ஓடும்.. ஓ ..ஓ ..ஓ (ரோஜாப் பூவும்)

No comments: