Friday, September 18, 2009

கேளாச் செவி

ஈன்றோர்சொல் ஆன்றோர்சொல் அன்பின் கிளைச்சொல்

தேன்சொட்டும் தேள்கொட்டும் அன்பில் விளைச்சொல்

என்றோசொல் முன்னோர்சொல் கேட்டாலும் என்செவிக்கு

என்றெட்டும் உள்எழும்என் சொல் ?



தூங்கும் குழவியைத் தாலாட்டி அன்புடன்

தாங்கும் அழகிய தூளிக்குக் கேட்பதில்லை

ஏங்கிஅழும் மழலை ஓசை - மனதினுள்

ஓங்குசொல் கேட்டதா செவிக்கு ?