Wednesday, September 2, 2009

நீரே

அலைக்கடல்தனில் நீலமாகி,
பனிமலைதனில் வெண்மையாகி,
படர்மேகத்தில் கறுப்பாகி
வயற்சேற்றினில் பழுப்பாகி
பயிர்ப் பரப்பினைப் பசுமையாக்கி,

கதிர்க் கரங்களை ஏழ் வண்ண
வில்லாய் வளைக்கும் நீர்
நிறமற்ற நீரே!

நீர் எலாம் ஒன்றே
என நில மாந்தர்க்கு
நீரே சாற்றுவீரே!

No comments: