Monday, September 28, 2009

கலைமகள்

வீணை நரம்பிலும் மீட்டும் விரல்களிலும்
தூணைத் திருத்திச் சிலைசெய் உளியிலும்
மானை வரைகின்ற தூரிகைத் துள்ளலிலும்
பானை வனையும் விரலிடைச் சேற்றிலும்
ஓடியாடும் வாணியே வந்தெனது மூளையில்
ஓய்வாக வேணும்உட் கார்

No comments: