Wednesday, September 2, 2009

நன்னயம்

பரிகசித்தாலும் பானைக்குப்  

பசியாற்றும் பழையசோறு...


அலை அடித்தாலும் அரித்தாலும்

கடலை அணைக்கும் கரை...


வெட்டிச் சாய்த்தவன் 

படுத்துறங்கும் கட்டிலாகும் மரம்...  


மனிதா

உனக்கு மட்டும் ஏன்?

கண்ணுக்குக் கண்.

பல்லுக்குப் பல்?


யாரையும் பழிவாங்க நானிதை எழுதவில்லை!



No comments: