Sunday, August 30, 2009

மூளை

எண்ணற்ற மின்னணுச் சுற்றுக்களைத்

தன்னகத்தடக்கிய கணிப்பொறி;


எனது அவயங்களை

ஆணையிடும் அதிகாரி;


கால வெள்ளத்திலும்

நினைவு மரத்தை

நிற்கச் செய்யும்

நீண்ட ஆணிவேர்;


உற்ற நேரத்தில் உதவிடும் உயிர்த்தோழன்;

உண்மையின் உறைவிடம்;

பொய்மையின் பிறப்பிடம்;

எண்ணற்ற தாஜ்மகால்களைக்

கற்பனையில் கட்டும் ஷாஜகான்;


எல்லாவற்றிற்கும் மேலாய்

எல்லோரும் என்னை

முட்டாள் எனக் கூறுவதின்

மூலகாரணி!


No comments: