Saturday, March 15, 2008

தாலாட்டு : புல்லின் நுனியில் பனித்துளி

<< இசைக்கோர்ப்பு இன்னும் முடியவில்லை. பாடல் கேட்க மீண்டும் வருக ! >>

ஆரிராரோ ஆராரோ ...

புல்லின் நுனியில் பனித்துளி
மரக்கிளையினில் பசுங்கிளி
கண்கள் மூடித் தூங்குது பார் மானே
நீ அன்னை மடியில் உறங்கிடுவாய் தேனே ( ஆரிராரோ ஆராரோ ...)

நட்சத்திரங்கள் மினுக்கிட
மின்மினிப் பூச்சிகள் ஜொலித்திட
நிலவும் கூட சிரிக்குது பார் வானில்
நீ சிரித்தபடி உறங்கிடு என் தோளில் ( ஆரிராரோ ஆராரோ ...)

கடற்கரையினில் அலைகளும்
வலையின் வெளியில் கொசுக்களும்
ராகம் இசைத்துப் பாடுது பார் மானே
நீ பாடல் கேட்டு உறங்கிடுவாய் தேனே ( ஆரிராரோ ஆராரோ ...)

அத்தை ஒருபக்கம் அணைத்திட
பாட்டி மறுபக்கம் கதைசொல்ல
பாசமுள்ள குடும்பமிது மானே
நீ ஆசையுடன் உறங்கிடுவாய் தேனே ( ஆரிராரோ ஆராரோ ...)

No comments: